» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)

தூத்துக்குடி பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட பால்பாண்டி நகரில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த பின்னர், தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி (குண்டு சரள்) பரப்பப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் கடும் சிரமத்திற்கும், விபத்து அபாயத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சேறும், வெயில் காலங்களில் கடும் தூசும் எழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பால்பாண்டி நகரில் தரமான தார் சாலையை விரைந்து அமைத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory