» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)
எப்பொதும்வென்றான் அருகே சோலார் நிறுவனத்தில் மின் வயர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், சாரக் கம்பில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிதம்பரம் பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாரிக்காளை (47), பத்மாவதி சோலார் நிறுவனத்தில் மின் வயர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். குமரெட்டியாபுரம் விலக்கு அருகே, உயர் மின்னழுத்த மின் வயர்களுக்கு மேலாகப் புதிய மின் வயர்களைக் கொண்டு செல்வதற்காகக் கம்புகள் மூலம் சாரம் அமைத்து வேலை பார்த்து வந்தனர்.
பணிகள் முடிந்து சாரக் கம்புகளை அவிழ்க்கும் பணியில் மாரிக்காளை ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக நிறுவன வாகனத்தின் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர், மாரிக்காளை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்பொதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 4பேர் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 8:15:20 PM (IST)

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!
வெள்ளி 10, ஜூலை 2026 5:38:14 PM (IST)

தூத்துக்குடியில் நாய் மீது கல்வீசிய விவகாரத்தில் மோதல்; இருவருக்குப் போலீஸ் வலை!
வெள்ளி 10, ஜூலை 2026 5:11:46 PM (IST)

இ-கேசிசி மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 4:41:27 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

பால்பாண்டி நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
வெள்ளி 10, ஜூலை 2026 4:17:53 PM (IST)









ஐய்யோJul 10, 2026 - 03:40:31 PM | Posted IP 172.7*****