» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழுவிற்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!

திங்கள் 15, ஜூன் 2026 4:21:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கான புதிய மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினராகச் சேர தகுதியுடையவர்கள் நாளைக்குள் (ஜூன் 16) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10.11.2020 அன்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. விதிமுறைகளின்படி இக்குழுவானது மூன்று ஆண்டுகளுக்குள் கலைக்கப்பட வேண்டும் என்பதால், தற்போது நடைமுறையில் உள்ள பழைய குழு முழுமையாகக் கலைக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் கீழ்க்கண்ட விபரங்களின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்:

குழுவின் கட்டமைப்பு விபரம்:

தலைவர்: மாவட்ட ஆட்சியர்

உறுப்பினர்: மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்

உறுப்பினர்: நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்

உறுப்பினர்: காவல் கண்காணிப்பாளர்

அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள்: பட்டியல் சாதியினர் / பழங்குடியினரைச் சேர்ந்த மூன்று குரூப் 'ஏ' (Group A) அதிகாரிகள் அல்லது மாநில அரசின் அரசிதழ் பதிவு பெற்ற (Gazetted) அதிகாரிகள்.

அரசு சாரா உறுப்பினர்கள்: பட்டியல் சாதியினர் / பழங்குடியினரைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனங்களை (NGO) உள்ளடக்கிய 5 நபர்களுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினரைச் சேர்ந்த அரசு சாரா தனிநபர் உறுப்பினர்கள் 3 பேர்.

எனவே, இந்தத் தகுதிகளின்படி இக்குழுவில் உறுப்பினராக இணைய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள், தூத்துக்குடி மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினருக்கான விண்ணப்பங்களை வருகின்ற 16.06.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory