» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் நிலைதடுமாறி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!

திங்கள் 15, ஜூன் 2026 3:21:25 PM (IST)

தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில், படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை வி.எம்.சத்திரம், கவிதா நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் சுடலை (32). இவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி தனது பிளாட்டினா இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையில் தானாகவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுடலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11.40 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory