» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணக் கொள்ளை : ஆய்வுக்குழு அமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 12:28:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட, பல மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கு அரசு நிர்ணயித்துள்ள முறையான கல்விக் கட்டணத்தை விட, இரண்டு மற்றும் மூன்று மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்திய மாணவர் சங்கம் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியுள்ளபடி, அனைத்துத் தனியார் பள்ளிகளும் தாங்கள் வசூலிக்கும் கல்விக்கட்டண விபரங்களைப் பெற்றோர்கள் தெளிவாக அறியும் வண்ணம் தங்களின் அறிவிப்புப் பலகையில் வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தூத்துக்குடியில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த உத்தரவைச் சற்றும் மதிக்காமல் முழுமையாகப் புறக்கணித்துச் செயல்படுத்தாமல் உள்ளன. அரசு நிர்ணயித்த தொகையை விடப் பல மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதை மறைப்பதே இதற்கு முதன்மைக் காரணம் என்று மாணவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இத்தகைய அநியாயக் கட்டணக் கொள்ளை காரணமாக, உன்னத நோக்கக் கல்வியானது தற்போதைய சூழலில் சேவையிலிருந்து முற்றிலும் விலகி லாபம் ஈட்டும் ஒரு வியாபாரமாக மாற்றப்பட்டு வருவதாகப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இக்கல்விக் கட்டணக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவசரமாகத் தனி ஆய்வுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இக்குழுவின் மூலம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தீவிர ஆய்வு நடத்தி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டரீதியாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் எஸ். மாடசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் ஆர். ராம்குமார் ஆகியோர் தங்களின் கோரிக்கை மனுவில் உறுதியாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 2பேர் கைது; மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 12:38:41 PM (IST)

டிராக்டர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கக் கோரி தூத்துக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 8, ஜூன் 2026 11:56:40 AM (IST)

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:46:39 AM (IST)

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)











சங்கரன்Jun 8, 2026 - 12:55:24 PM | Posted IP 172.7*****