» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!

ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

திருச்செந்தூரில் வீடுபுகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பாரதியார் தெருப் பகுதியைச் சேர்ந்த  மாரியப்பன் மகன் வினித்முத்துராஜ் (20) என்பவர்  11-ஆம் வகுப்பு முடித்துவிட்டு 12-ஆம் வகுப்பு செல்லவிருக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தபோது வினித் முத்துராஜ், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன் பேரில், வினித்முத்துராஜ் மீது காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.சண்முகவடிவு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். தப்பியோடிய வினித்முத்துராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory