» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 5 சென்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில், காவல்துறையினர் முள்ளக்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளக்காடு அருகே சந்தேகப்படும்படியாக ஐந்து இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைக் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (27) நந்தகுமார் (23), விஜயராகவன் (27), பாலகிருஷ்ணன் (25),ராம்குமார் (25) என்பது தெரியவந்தது.
அவர்கள் மறைத்து வைத்திருந்த பையைத் தீவிரமாகச் சோதனை செய்த போது, அதனுள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3.300 கிலோ கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய அவர்களது 5 கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 5 பேரையும் காவல்துறையினர் முறைப்படி கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் அனைவரும் மதுரையிலிருந்து பெருமளவில் கஞ்சாவை ரகசியமாக வாங்கி வந்து, தூத்துக்குடியின் புறநகர்ப் பகுதிகளான முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், உள்ளூர் நபர்களுக்கும் சில்லறையாக விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
இவர்கள் மதுரையில் யாரிடமிருந்து இந்தக் கஞ்சா பொதிகளை வாங்கினார்கள், இப் பின்னணியில் உள்ள முக்கியக் கடத்தல் புள்ளிகள் யார் என்பது குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 63 மதுபானக் கடைகள் மூடல்! பெண்கள் பெரும் மகிழ்ச்சி; மதுப்பிரியர்கள் அவதி!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:32:07 AM (IST)










