» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சந்திப்பு : முக்கியக் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பு!

செவ்வாய் 2, ஜூன் 2026 3:22:21 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் அரசு நலவாரிய உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைச் செயலாளரும் தூத்துக்குடி மாவட்டத் தலைவருமான பேர்சில், மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் மெய்கண்டன், (SIDDS) மாவட்டச் செயலாளர் அழகுலட்சுமி, பாண்டி செல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகள் அடங்கிய விரிவான கோரிக்கை மனு ஒன்றினையும் பிரதிநிதிகள் அவரிடம் நேரில் அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன், மாற்றுத்திறனாளிகளின் அனைத்துத் தகுதியான கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரியத் துரித நடவடிக்கை மேற்கொள்வதாகச் சங்கப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory