» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி : காவல்துறையில் சோகம்!
சனி 9, மே 2026 7:23:00 PM (IST)
தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நிகழ்ந்த பைக் விபத்தில் முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அரவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் வேல்பாண்டி (32). இவர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.நேற்று வேல்பாண்டி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் முறப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நெல்லை கே.டி.சி நகர் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண், எதிர்பாராத விதமாக வேல்பாண்டியின் பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்பாண்டிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்பாண்டி, இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்துப் பாளையங்கோட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டர் ஓட்டிய பெண் குறித்தும், விபத்து நடந்த விதம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 32 வயதே ஆன இளம் அதிகாரி விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை : மே 23 வரை விண்ணப்பிக்கலாம்!
ஞாயிறு 10, மே 2026 8:24:49 PM (IST)

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம் : விவசாயிகள் கவலை!
ஞாயிறு 10, மே 2026 9:38:57 AM (IST)










