» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழல் புகார் : தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சனி 9, மே 2026 3:31:35 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்ச ஊழல் புகார்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தொ.மு.ச. அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தொழிற்சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமைப் பொறியாளர் மீது புகார்: மேற்பார்வைப் பொறியாளர் இயக்குநர் ராம்குமார் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலைமைப் பொறியாளராக (பொறுப்பு) பணியாற்றிய காலத்தில், பல ஒப்பந்தப் பணிகளுக்குக் கையூட்டாக 5% வரை பெற்று, விருதுநகரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உதவி செயற்பொறியாளர் வெற்றிவேல்குமார், தான் பணிபுரியும் இடத்தில் ஒப்பந்தப் பணியாளர்களைத் தனது சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகளைப் பழிவாங்கும் நோக்கில், ஊழல்களைச் சுட்டிக்காட்டிய காரணத்திற்காகவும், பதவி உயர்வு வேண்டாம் எனத் தெரிவித்தும் அவர்களுக்குப் பணிவிடுவிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் புரிந்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் தலைமைப் பொறியாளரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஊழல் மற்றும் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பி. கீதா ஜீவன் தலைமையில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை : மே 23 வரை விண்ணப்பிக்கலாம்!
ஞாயிறு 10, மே 2026 8:24:49 PM (IST)

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம் : விவசாயிகள் கவலை!
ஞாயிறு 10, மே 2026 9:38:57 AM (IST)










