» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)
தூத்துக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரி புளியம்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல் (48). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் தெய்வச்செயல்புரம் சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த பைக் எதிர்பாராத விதமாகக் குமாரவேல் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த இரத்தக் காயம் அடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து பைக்கை ஓட்டி வந்த மேலக்கூட்டுடன்காடு, மேற்குத் தெருவைச் சேர்ந்த வெனில்குமார் (21) என்பவர் மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)

தூத்துக்குடியில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி - முகவர்கள் தவிப்பு!
சனி 2, மே 2026 9:01:07 AM (IST)









