» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தங்கத் தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்: சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்!
சனி 2, மே 2026 8:42:28 AM (IST)

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் பத்து நாட்கள் நடைபெற்று வந்த சித்திரை வசந்த திருவிழாவும் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் அதிகாலை 5.30 மணிக்கும், உதயமார்த்தாண்ட அபிஷேகம் காலை 6 மணிக்கும் நடைபெற்றது. கோடை விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.
இரவு நடைபெற்ற விழாவில், வள்ளி - தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்கத் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கிய சித்திரை வசந்த திருவிழா, 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மதியம் உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)









