» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)
கயத்தாறு அருகே தீராத வயிற்று வலி காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு இலந்தைகுளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சேதுத்தாய் (66). இவர் தனது பகுதியில் சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில காலமாக சேதுத்தாய் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டும் வலி குறையாததால் மனமுடைந்த சேதுத்தாய், கடந்த 30.04.2026 அன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீராத உடல்நலக் குறைவால் மூதாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தூத்துக்குடியில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி - முகவர்கள் தவிப்பு!
சனி 2, மே 2026 9:01:07 AM (IST)









