» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 4-ஆம் திருநாளில் சுவாமி, அம்பாள் ரத வீதி உலா!

சனி 25, ஏப்ரல் 2026 8:33:48 AM (IST)



தூத்துக்குடி நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் நான்காம் திருநாளான நேற்று இரவு சுவாமி மற்றும் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் நான்காம் நாளான நேற்று மாலை, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 8 மணி அளவில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் (நந்தி வாகனம்) சுவாமி சங்கர ராமேஸ்வரரும், அம்பாள் பாகம்பிரியாளும் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்க, விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர். 

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வாகனமான ரிஷப வாகனத்தில் இறைவன் வீதி உலா வந்ததைக் காண ரத வீதிகளில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory