» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 5-ஆம் திருநாளில் கற்பக விருட்சம் - காமதேனு வாகனங்களில் வீதி உலா!

சனி 25, ஏப்ரல் 2026 9:36:06 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஐந்தாம் திருநாளான இன்று இரவு, கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று இரவு, அலங்கரிக்கப்பட்ட கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி சங்கர ராமேஸ்வரரும், காமதேனு வாகனத்தில் அம்பாள் பாகம்பிரியாளும் எழுந்தருளினர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தனர். மங்கல இசை முழங்க, ரத வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான  தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory