» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

யார் வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் : இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:15 AM (IST)



பிரபல திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தனது சொந்த ஊரான புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமம் இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த ஊராகும். அங்குள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று (வியாழக்கிழமை) காலை நேரில் வந்த அவர், பொதுமக்களோடு ஒருவராக வரிசையில் நின்று தனது வாக்கை முறையாகப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது: "எனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன். ஒரு ஆட்சிக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் மக்களிடமே உள்ளது. மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய முக்கியமான நேரம் இது. குறிப்பாக, தங்களது சித்தாந்தத்தை மனதில் வைத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது" என்றார்.

சமூகப் பொறுப்புணர்வுடன் அவர் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, தனது ஊர் மக்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory