» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நிறைவுற்றது ஜனநாயகத் திருவிழா: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்! :மே 4-ல் முடிவுகள் அறிவிப்பு
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:04:42 PM (IST)
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அமைதியான முறையில் நிறைவடைந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டனர். வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி (Control Unit) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் (VVPAT) ஆகியவை பாதுகாப்பாகச் சீல் வைக்கப்பட்டன. முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களின் எண்கள் சரிபார்க்கப்பட்டு, காப்பகங்களுக்குக் கொண்டு செல்லத் தயார் செய்யப்பட்டன.
6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 79.75% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புடன் இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும்.
மே 4-ல் தேர்தல் முடிவுகள்: தமிழகம் முழுவதும் இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை வேட்பாளர்களின் வெற்றி தோல்வி இந்த மின்னணு இயந்திரங்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







