» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சமா? உணவு, குடிநீர் இன்றி வேதனை!

வியாழன் 23, ஏப்ரல் 2026 7:27:53 PM (IST)



விளாத்திகுளம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உணவு, குடிநீர் மற்றும் ஊதியம் இன்றி தாலுகா அலுவலகத்தில் திரண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியாற்ற அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளத்தில் உள்ள வி.கே. முருகையா நாடார் திருமண மண்டபத்தில் 'ரிசர்வ்' (Reserve) பணியாளர்களாகத் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று காலை முதல் திருமண மண்டபத்தில் காத்திருந்த தங்களுக்குக் குடிநீர், காலை மற்றும் மதிய உணவு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து தரவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் காரணமாகப் பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், உணவு கிடைக்காமல் ஊழியர்கள் நீண்ட நேரம் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தங்கியிருந்த பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் உணவு உடனுக்குடன் வழங்கப்பட்டுப் பாராட்டைப் பெற்ற நிலையில், விளாத்திகுளத்தில் மட்டும் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்குத் தூத்துக்குடி மற்றும் எட்டயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மாலை 6 மணிக்கே ஊதியம் (Remuneration) வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், விளாத்திகுளத்தில் இரவு 7 மணி ஆகியும் இதுவரை குடிநீரோ அல்லது பணிக்கான ஊதியமோ வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் திரண்டு அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

தேர்தல் நாளன்று தங்களின் கடமையை ஆற்ற வந்த அரசுப் பணியாளர்களைக் கனிவுடன் நடத்தாமல், பசியோடு காத்திருக்க வைத்துள்ள அதிகாரிகளின் போக்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory