» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:01:26 AM (IST)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை வசந்த திருவிழா நேற்று (புதன்கிழமை) மாலை வெகுவிமர்சையாகத் தொடங்கியது.
திருவிழாவின் முதல் நாளை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். காலை 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்றன. மதிய உச்சி கால பூஜையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தகிக்கும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின், சுவாமி ஜெயந்திநாதருக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேளதாளங்கள் முழங்க, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். நேற்று நடைபெற்ற வசந்த திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைத் தக்காார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







