» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா 2-ஆம் திருநாள்: சுவாமி, அம்பாள் வீதி உலா!

புதன் 22, ஏப்ரல் 2026 9:16:25 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, சுவாமி சங்கர ராமேஸ்வரர் புருஷ மிருக வாகனத்திலும், அம்பாள் பாகம்பிரியாள் காமதேனு வாகனத்திலும்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தூத்துக்குடி நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு நடைபெற்ற வாகனச் சேவையில் சுவாமி சங்கர ராமேஸ்வரர் கம்பீரமான புருஷ மிருக வாகனத்தில் எழுந்தருளினார். 

அம்பாள் பாகம்பிரியாள் மங்கலகரமான காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். ரத வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினசரி வெவ்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory