» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 12:55:23 PM (IST)



மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் இச்செயலைக் கண்டித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

முதல்வரின் அழைப்பை ஏற்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீராசா தலைமையில் தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு, ஜெய்லானி தெரு, எம்.கே. தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சியினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory