» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:27:36 AM (IST)



தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் பாரதப் பிரதமரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக கார் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். அவரை, அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி அன்புடன் வரவேற்றனர். 

வரவேற்பு நிகழ்வின் போது, தேர்தல் களம் மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாகத் தெரிகிறது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்கள் எனப் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory