» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:53:45 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி, தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிலைய போக்குவரத்து அலுவலர் புன்னவன கட்டி முன்னிலை வகித்தார். பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த வீரவணக்க நிகழ்வில் நிலையப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை : ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:17:50 AM (IST)







