» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வளர்ப்புப் பன்றிகள் உயிரிழந்த சோகத்தில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:21:29 AM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே வளர்ப்புப் பன்றிகள் நோய் தாக்கி உயிரிழந்த மனவேதனையில், வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார்திருநகரி வதம்போகித் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (32), தந்தை பெயர் செல்வம். இவர் அப்பகுதியில் உள்ள வைரமாளிகை ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சின்னதுரைக்கு ஈஸ்வரி (28) என்ற மனைவியும், இசக்கி (8), இசக்கியம்மாள் (5), இசக்கி திவ்யா (4) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

சின்னதுரை தனது வீட்டில் உப தொழிலாகப் பன்றிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவர் வளர்த்து வந்த பன்றிகளில் மூன்று பன்றிகள் நோய் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தன. தான் ஆசையாக வளர்த்த விலங்குகள் இறந்ததால் சின்னதுரை கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சின்னதுரை வீட்டின் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி காவல்துறை உதவி ஆய்வாளர் பாலன், சம்பவ இடத்திற்கு விரைந்து சின்னதுரையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory