» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்திரை விசு : தங்க அங்கி - கனிகளால் சிறப்பு அலங்காரம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:44:07 AM (IST)



தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை விசு திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.

வாக்கிய முறைப்படி, 'விசுவாவசு' ஆண்டு நிறைவடைந்து, புதிய 'பராபவ' ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அதிகாலை 5:00 மணிக்குத் திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 5:30 மணிக்கு மாரியம்மனுக்குப் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, பல்வேறு வகையான காய்கனிகளால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மங்கல இசை முழங்க அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. புதிய ஆண்டின் முதல் நாளில் அம்மனைத் தரிசித்து அருள் பெற, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் வரிசைப்படுத்துதல் வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory