» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வயரிங் வேலையின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:05:28 AM (IST)

குரும்பூர் அருகே வீட்டின் வயரிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (39). இவர் தனது மனைவியைப் பிரிந்து ஆறுமுகனேரியில் தாயாருடன் வசித்து வந்தார். எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஷ் கண்ணன் நேற்று ஆறுமுகனேரியைச் சேர்ந்த உகேஷ் என்பவருடன் இணைந்து, குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலம் - சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன் வேலையின் போது நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory