» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆயிரம் பயனாளிகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கல்!

ஞாயிறு 15, மார்ச் 2026 9:14:57 PM (IST)



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகரக் கிளை சார்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கான ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் உள்ள கட்சியின் நகர அலுவலகமான தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ் துஆ பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ஃபித்ரா அரிசியின் முதல் பொதியை வழங்கிப் பகிர்வுப் பணியைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் ஆயிரம் பயனாளிகளுக்கு அரிசி வழங்கினர். 

மூத்த நிர்வாகிகள் எம்.ஏ. முஹம்மத் ஹஸன், பாரூக், நிஃமத்துல்லாஹ், அயலக அணி மாநில நிர்வாகி என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹீம், அரபி ஷாஹுல் ஹமீத், மலேஷியா அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஹ்மத் நெய்னார் பள்ளி இமாம் கே.எம்.என். உமர் அப்துல் காதிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாகத் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory