» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)



வேடநத்தம் மாணவி படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல்போன பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரம் பஞ்.,சில் யாதவர் இளைஞரணி கூட்டமைப்பும், ஊர் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததால், அனைவரும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குரும்பூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப் இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் மறியலில் ஈடுபட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்துவிடுவோம் என்றார். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory