» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேடநத்தம் மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாதர் சங்கம் எஸ்பியிடம் மனு!

ஞாயிறு 15, மார்ச் 2026 7:44:45 PM (IST)



வேடநத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில்: கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தாமதமின்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். புகார் அளிக்க வந்தபோது அலட்சியம் காட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு, சட்ட உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும்.

"பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் காவல்துறையின் முதன்மையான பொறுப்பு. இந்த மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என்று சங்க நிர்வாகிகள் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது மாவட்டத் தலைவர் கமலம், மாவட்டச் செயலாளர் ஜானகி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, மாநிலத் துணைச் செயலாளர் பூமயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வேடநத்தம் பகுதிக்கு நேரில் சென்றனர். அங்கு உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory