» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு
ஞாயிறு 15, மார்ச் 2026 9:00:53 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 4,771 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் ஆர்.வசந்தி தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்காக தூத்துக்குடியில் 5 அமர்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தலா 2 அமர்வுகள், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் தலா 1 அமர்வு என மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வங்கி வாராக்கடன் 315 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு, 154 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தொகை ரூ. 4.89 கோடியாகும்.
5,149 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 4,617 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. இதன் மதிப்பு ரூ. 16.78 கோடியாகும். ஒட்டுமொத்தமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் 5,464 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 4,771 வழக்குகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வுத் தொகை ரூ. 21 கோடியே 68 லட்சத்து 86 ஆயிரத்து 595 ஆகும்.
இந்த நிகழ்வில் நீதிபதிகள், காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், வங்கி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஞாயிறு 15, மார்ச் 2026 1:58:29 PM (IST)

ராஜ்யசபா எம்.பி. கான்ஸ்டண்டன் ரவீந்திரனுக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 1:53:18 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:39:35 AM (IST)

பக்கத்து வீட்டில் 15 பவுன் நகை திருடிய வாலிபர் கைது : 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:13:08 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை குறைந்தது: வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:08:32 AM (IST)







