» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)



நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பார்சல்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் போலீசார் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் ஒரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சில பார்சல்கள் கேட்பாரற்று கிடந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பார்சல்களைக் கைப்பற்றிச் சோதனையிட்டனர்.

சோதனையில், அந்தப் பார்சல்களில் சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. வெளிமாநிலம் அல்லது வெளி மாவட்டத்திலிருந்து இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்களை ரயில்வே போலீசார், மேல் நடவடிக்கைக்காக மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த ஊரிலிருந்து கஞ்சாவை ஏற்றி வந்தனர்? என்பது குறித்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory