» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாண்டியர் காலத்தில் செயற்கை முறையில் முத்து வளர்ப்பு: வரலாற்று ஆய்வாளர் இராஜேஷ் செல்வரதி புதிய தகவல்!

திங்கள் 16, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)



சங்க காலப் பாண்டியர்கள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் (சதுப்பு நிலங்கள்) திட்டமிட்டு முத்துக்களை விளைவித்தனர் என்பதற்குப் பல்வேறு இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பெ. இராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் "முத்து விளை கழனி முந்நீர் வரைப்பில்" (வரி: 144) என்ற மதுரைக்காஞ்சி பாடலை அடிப்படையாகக் கொண்டு அவர் விளக்குகையில்:

விளை: முத்துக்கள் தானாகக் கிடைப்பது மட்டுமல்லாமல், அவை 'பயிரிடப்பட்டு' விளைவிக்கப்பட்டன என்பதைக் குறிக்கிறது.

கழனி: பொதுவாக வயலைக் குறிக்கும் இச்சொல், இங்கு முத்து விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட மருத நிலம் போன்ற செழிப்பான சதுப்பு நிலப் பகுதியைக் குறிக்கிறது.

முந்நீர்: ஆற்று நீர், ஊற்று நீர் மற்றும் கடல் நீர் ஆகிய மூன்றும் கலந்த 'கலப்பு நீர்' (Brackish water) சூழலில் முத்துக்கள் வளர்க்கப்பட்டதைக் காட்டுகிறது.

வரைப்பில்: இது மதில் அல்லது சுவரால் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட நீர்நிலையைக் குறிக்கிறது.

ஆய்வுத் தரவுகள்: வே. பனையூர் மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் 1778-ம் ஆண்டின் 'இராபர்ட் ஓரம்' வரைபடத்தின் தரவுகளைக் கொண்டு, இப்பகுதிகளில் கடல்சார் புதைபடிவ எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மத்திய விலங்கியல் துறையிடம் (ZSI) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், பாண்டிய மன்னர்கள் கால்வாய்கள் வழியாகக் கடல் நீரை உட்புகுத்தி, மழை நீர் மற்றும் நிலத்தடி நீருடன் கலந்து பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளில் உயர்தர வெண் முத்துக்களைப் பயிரிட்டனர் என்பது புலனாகிறது.

உலகின் முதல் 'செயற்கை முத்து உற்பத்தியாளர்கள்' தமிழர்களே என்பதை நிரூபிக்க, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் இந்திய விலங்கியல் ஆய்வுத் துறை (ZSI) மற்றும் இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை (GSI) விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என இராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory