» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமி திடீர் மரணம்: தூத்துக்குடியில் பரிதாபம்!

சனி 7, பிப்ரவரி 2026 10:57:19 AM (IST)

தூத்துக்குடியில் தாயுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி மடத்தூர், பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி. இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது மகள் தனுஷா (4) உடன் சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது மகள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

உடனடியாக மகளை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 4 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory