» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

வியாழன் 5, பிப்ரவரி 2026 12:51:54 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. மேலும் சாலைகளில் கார்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து அபாயம் மற்றும் அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

காலை, மாலை பள்ளி நேரங்களில் வாகனப் பெருக்கத்தால் பள்ளிகள் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறுகிய சாலைகளில் கார்களை நிறுத்துவதால் இந்நிலை ஏற்படுகிறது. பள்ளி அருகே சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை தடை செய்து போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. 

சாலையோரங்களில் கட்டிடக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதும் போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. எனவே, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory