» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!

வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)

நெல்லையில் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் (22). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.பின்னர் அவர்களுக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து விக்ரம் அந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் கதறினர். ஆத்திரமடைந்த விக்ரம், இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் இதுபற்றி பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில்தான் சிறுவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தந்தை நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுவர்களுக்கு விக்ரம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று போலீசார் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory