» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரிவாளுடன் திரிந்த 3 பேர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:26:05 AM (IST)
தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் பைக்கில் அரிவாளுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தெற்கு பீச் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளில் அரிவாள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பூபாலராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன் (வயது 26), தெற்கு ராஜாதெருவை சேர்ந்த சலேத் (24) மற்றும் எஸ்.எஸ்.மாணிக்க புரத்தை சேர்ந்த அரவிந் (24) என்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:48:24 PM (IST)

அசல் ஆவணங்களைத் திரும்ப வழங்காத வங்கிக்கு ₹60,000 அபராதம் : நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:43:45 PM (IST)

விளாத்திகுளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:14:18 PM (IST)

தூத்துக்குடியில் 10-ம் தேதி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்: நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:30:30 PM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் ஆபத்தான பள்ளங்கள் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 4:43:22 PM (IST)










மக்கள்Feb 5, 2026 - 04:49:01 PM | Posted IP 104.2*****