» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரிவாளுடன் திரிந்த 3 பேர் கைது!

வியாழன் 5, பிப்ரவரி 2026 8:26:05 AM (IST)

தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் பைக்கில் அரிவாளுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தெற்கு பீச் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளில் அரிவாள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பூபாலராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன் (வயது 26), தெற்கு ராஜாதெருவை சேர்ந்த சலேத் (24) மற்றும் எஸ்.எஸ்.மாணிக்க புரத்தை சேர்ந்த அரவிந் (24) என்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

மக்கள்Feb 5, 2026 - 04:49:01 PM | Posted IP 104.2*****

சுட்டு பிடிக்க வேண்டியது தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory