» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதியாா் நினைவு தினம்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:22:20 AM (IST)



எட்டயபுரத்தில் பாரதியாரின் 104ஆவது நினைவு தினத்தையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசுத்துறை அதிகாரிகள், பாரதி அன்பா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

எட்டயபுரத்தில் நேற்று பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தாசில்தார் சுபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் உதயசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதில் மாவட்ட தலைவர் ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் மணிமொழி நங்கை, கிளை தலைவர் பொன் பரமானந்தம், துணைச் செயலாளர் ஆறுமுகசாமி, கோவில்பட்டி கிளை செயலாளர் முத்துராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாரதி முற்போக்கு வாலிபர் சங்க மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர், ஆசிரிய- ஆசிரியைகள் அவரது ் பாடல்களை பாடி நினைவஞ்சலி செலுத்தினர். பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார். பிராமணர் சங்கம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் விஸ்வநாதன், மாநில அமைப்பு செயலாளர் குமார், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் விக்னேஷ் உள்பட சங்கத்தினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory