» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு

சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி மருதக்கனி (46). இவர் நேற்று மதியம் கால்நடைகளுக்கு சோழபுரம அருகே தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் வளர்ந்துள்ள புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மையத்தடுப்பில் புல் அறுத்துக் கொண்டிருந்த மருதக்கனி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் கார் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான தூத்துக்குடி போல்பேட்டை சேர்ந்த அழகர்சாமி மகன் ரமேஷ்குமார் (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory