» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது

சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)



கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி வாலிபர்கள் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒடிசாவிலிருந்து சிலர் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் கயத்தாறு -அய்யாபுரம் சாலையில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அய்யாபுரம் அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். 

அந்த பையில் 2கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர்.காலனி மாரிச்செல்வம் (21), போல்பேட்டையை சேர்ந்த மாரிபிரபாகரன் (25), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த சிவா (25), அன்பு நகரைச் சேர்ந்த சிவலிங்கம் (26) ஆகியோர் எனவும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, இப்பகுதியில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory