» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 8:44:26 PM (IST)

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று (11.09.2025) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மாவட்ட எல்லை சோதனை சாவடிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று சூரங்குடி மற்றும் கோடாங்கிபட்டி ஆகிய சோதனை சாவடிகளுக்கு நேரில் சென்றும், மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணியை ஆய்வு செய்து காவல்துறையினருக்குஅறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










