» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளையன் முதலாமாண்டு நினைவு தினம் : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

வியாழன் 11, செப்டம்பர் 2025 12:45:27 PM (IST)



தூத்துக்குடியில், தமிழ்நாடு வணிக சங்க பேரவையின், மாநில தலைவர் வெள்ளையனுக்கு, முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் பிரதான பஜாரில், தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஆர்.முத்துக்கனி தலைமை வகித்தார். செயலர் எஸ்.கிராஸ், பொருளாளர் எம்.அந்தோணி சௌந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜெ.ஐவஹர் கலந்துகொண்டு, வெள்ளையன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு சங்கத் தலைவர் ஆனந்த் சேகரன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜெபஸ்டியான், வேல்முருகன், செல்வராஜ், ஐசக் மற்றும் தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர்கள் குருசாமி, முத்து, துணைச் செயலர்கள் பஷீர், தங்க மாரியப்பன், சட்ட ஆலோசகர் எஸ்.அய்யாதுரை, ஆலோசகர்கள் பாஸ்கர், அந்தோணி மிக்கேல், மனுவேல் பாண்டியன், கனகராஜ், குணா பாஸ்கர், ஜான்சன், மாடசாமி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory