» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : மேலும் ஒருவர் படுகாயம்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 11:05:00 AM (IST)

தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி தெர்மல் நகர் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோவில் கொடை விழா நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக அவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெயமுருகன் (24) என்பவர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார். 

நேற்று இரவு கொடை விழா முடிந்ததும் ஜெயமுருகன் (24) ஊருக்கு புறப்பட்டார். பிரகாஷின் நண்பரான திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (25) அவரை தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறியதில் சென்டர் மீடியனில் மோதியது. 

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முருகன் மற்றும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார். ஜெயமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் நகர் காவல் நிலைய சப்  இன்ஸ்பெக்டர்  அய்யம்பிள்ளை வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory