» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 10:43:22 AM (IST)

தூத்துக்குடியில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்து (59) இவர். இவரது மனைவி அன்னலட்சுமி. இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். முத்து திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி அன்னலட்சுமி உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து 3 முறை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் அவர் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார். 

அப்போது வீட்டிற்கு வந்த அவரது மருமகன், அவரை மீட்டு ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory