» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை : மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் சோகம்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 10:33:54 AM (IST)

தூத்துக்குடியில் மனைவி, குழந்தைகளை பிரிந்த விரக்தியில் மீனவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி (33) மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சில்வர்புரத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி இருப்பு பாதை ரயில்வே காவல் நிலைய  சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

SivaSriSep 11, 2025 - 01:08:51 PM | Posted IP 162.1*****

வணக்கம் எங்கள் பதிவுகளை பிறர் மனம் பாதிக்காத அளவுக்கு பதிவு கேட்கின்றீர்கள்.ஆனால் நீங்கள் எல்லோர்க்கும் பொதுவாக செய்தி வழங்கி வருகின்றீர்கள்.ஆனால் மீனவர் ரயில் முன் பாய்ந்து என்று பதிவு.ஏன் அவர் பெயர் பதிவு செய்யலாமே.இனி குலத்தொழில் கிடையாது எல்லாரும் எல்லா வேலைகளையும் தெரிந்து கொள்ளனும்.இது என்னுடைய கருத்து அவ்வளவுதான்.

SivaSriSep 11, 2025 - 01:08:48 PM | Posted IP 162.1*****

வணக்கம் எங்கள் பதிவுகளை பிறர் மனம் பாதிக்காத அளவுக்கு பதிவு கேட்கின்றீர்கள்.ஆனால் நீங்கள் எல்லோர்க்கும் பொதுவாக செய்தி வழங்கி வருகின்றீர்கள்.ஆனால் மீனவர் ரயில் முன் பாய்ந்து என்று பதிவு.ஏன் அவர் பெயர் பதிவு செய்யலாமே.இனி குலத்தொழில் கிடையாது எல்லாரும் எல்லா வேலைகளையும் தெரிந்து கொள்ளனும்.இது என்னுடைய கருத்து அவ்வளவுதான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory