» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காவல் நிலைய எழுத்தர்கள் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 8:23:00 AM (IST)
தூத்துக்குடியில் உயரதிகாரிகள் கேட்ட தகவலை தெரிவிக்க மறுத்த 13 காவல் நிலைய எழுத்தர்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் நிலைய எழுத்தர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 55-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தின்போது அதிகாரிகள் கேட்கும் தகவல்களை சரியாக கொண்டு வந்து சமர்ப்பிக்கவேண்டும், ஆவணங்கள் குறித்து கேட்ட தகவல்கள் தெரிவிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்களில் பலர் காவல் துறை உயரதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், உரிய தகவலை தெரிவிக்காமலும் இருந்துள்ளனர். இதனால் அவர்களில் 13 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 3 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










