» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல் நிலைய எழுத்தர்கள் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வியாழன் 11, செப்டம்பர் 2025 8:23:00 AM (IST)

தூத்துக்குடியில் உயரதிகாரிகள் கேட்ட தகவலை தெரிவிக்க மறுத்த 13 காவல் நிலைய எழுத்தர்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் நிலைய எழுத்தர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 55-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எழுத்தர்கள் கலந்து கொண்டனர். 

ஆய்வுக் கூட்டத்தின்போது அதிகாரிகள் கேட்கும் தகவல்களை சரியாக கொண்டு வந்து சமர்ப்பிக்கவேண்டும், ஆவணங்கள் குறித்து கேட்ட தகவல்கள் தெரிவிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்களில் பலர் காவல் துறை உயரதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், உரிய தகவலை தெரிவிக்காமலும் இருந்துள்ளனர். இதனால் அவர்களில் 13 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 3 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory