» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 8 பேர் காயம்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 8:13:10 AM (IST)

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 6 சிறுவர், சிறுமிகள், ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் இருந்து பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமார் 15 பேருடன் பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் கண்மாய் கரையோர சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, எதிரே தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக ஒருபுறம் ஒதுக்கியபோது, வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேன் ஓட்டுநர் அச்சங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த சோ.முத்துராஜ் (49), வேனில் பயணித்த உதவியாளர் த. ருக்மணி(45) மற்றும் 6 சிறுவர், சிறுமிகள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory