» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி

வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)



திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரனுக்கு தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துகுமார் தலைமையில் சிவன் கோவில் தேரடி அருகில் இருந்து ஊர்வலமாக சென்று வைகுண்டபதி பெருமாள் கோவிலில் மோச தீபம் ஏற்றப்பட்டது. பிஜேபி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி முன்னிலை வகித்தார்.மேற்கு மண்டல தலைவர் சுதாகர் தலைமையில் டுவிபுரம் 5 தெருவில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. சரவணகுமார், நாராயண ராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் மேற்கு மண்டல துணை தலைவர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

வடக்கு மண்டலம் சுந்தரவேல் புரம் மெயின் அம்பேத்கார் நகர் எதிரில் பாலமுருகன் கோபி தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கிழக்கு மண்டலம் தச்சர் தெருவில் மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாதன் ஆழ்வார் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல தலைவர்கள் கிளை பொறுப்பாளர்கள் ஆயாம் பொறுப்பாளர்கள் பரிவார அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory