» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது - 145 மதுபாட்டில்கள் பறிமுதல்!
புதன் 10, செப்டம்பர் 2025 4:32:45 PM (IST)

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 145 மது பாட்டில்கள், மற்றும் ரொக்க பணம் ரூ.2650 பறிமுதல் செய்யப்பட்டது..
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முத்தையாபுரம் வடக்கு தெருவில் உள்ள டீக்கடை முன்பு சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அந்த பையில் மதுபான பாட்டில்கள் இருந்தது.
விசாரணையில் அவர் தங்கமணி நகர் 4வது தெருவை சேர்ந்த அழகர் மகன் முனியசாமி (38) என்பதும், கடைகளில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முனியசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 145 மது பாட்டில்கள், மற்றும் ரூ.2650 ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முனியசாமி சட்ட விரோத மது விற்பனை, திருட்டு, அடிதடி என மொத்தம் 6 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










