» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பேச்சாளருக்கு புதுமைப் பெண் விருது

புதன் 10, செப்டம்பர் 2025 4:06:53 PM (IST)



கோவில்பட்டியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதிக்கு  ரோட்டரி சங்கத்தின் சார்பில் பாரதி கண்ட புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி கலந்து கொண்டு இல்லறம் இனிக்கட்டும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்ன பாரதிக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ரோட்டரியின் புதுமைப் பெண்விருது வழங்கி பாராட்டி பேசினார். இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், நாராயணசாமி, பாபு, முத்துச்செல்வன், ஆசியா பார்ம்ஸ் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் முத்து முருகன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory