» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருப்பு கொடியுடன் பொதுமக்கள் போராட்டம் : தூத்துக்குடி அருகே பரபரப்பு

புதன் 10, செப்டம்பர் 2025 12:19:37 PM (IST)



தூத்துக்குடி அருகே மறவன்மடம் கிராமத்தில் கருப்பு கொடியுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் மறவன்மடம் கிராமத்தில் சாலை அமைக்க வலியுறத்தி கருப்பு கொடியுடன் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மறவன்மடம் ஊராட்சியில் உள்ள வருமானவரி நகரில் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் வசிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் மனு கொடுத்தும் வந்தோம். 

இதுவரை எங்களுக்கு சாலை வசதி அமைத்து கொடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மணல் பாங்கானதால் வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. 2023 டிசம்பர் வெள்ளத்திற்கு பிறகு சாலைகளில் மணல் திட்டுகளினால் சாலைகள் உபயோகமற்ற முறையில் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிதிவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தார்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

போராட்டம் குறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக  தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சுமார் 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory